திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி-ஆட்சியர்

by Editor / 19-09-2022 01:27:12pm
திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி-ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதே போன்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கு ஊர்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் பத்து படுக்கை வசதிகள் கொண்ட காய்ச்சல் வார்டுகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யபட்ட தகவலை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

 

Tags :

Share via