தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்துஅரசாணை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை மத்திய அரசு நேற்று சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. மேலும், பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தவை பிறப்பித்தது. தொடர்ந்து பிஎப்ஐ-வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியது. இந்நிலையில், தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பு கேரளாவில் கலைக்கப்பட்டுள்ளதாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :