திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.

by Editor / 01-10-2022 12:16:51pm
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், மற்றும் கருட சேவை நடைபெற்றுவரவதாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.மேலும் இலவச தரிசனத்திற்காக 14 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர். இன்று இரவு நடைபெறும் கருட சேவையை காண 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தானம் எதிர்பார்ப்பு.பாதுகாப்பு பணிகளில் ஐந்தாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via