கணவர் செல்போன் வாங்கி தராததால் மனைவி தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார் காலணியில் வசித்து வருபவர் முருகன். முருகன் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (26). இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த போது பெட் ரூம் உள்ளே தாலிட்டுருந்தது. கதவை வேகமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முருகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரஸ்வதி மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :