சட்டமன்றத்தை தொடர்ந்து புறக்கணிக்க எடப்பாடி முடிவு?

by Editor / 11-10-2022 10:43:37pm
சட்டமன்றத்தை தொடர்ந்து புறக்கணிக்க எடப்பாடி முடிவு?

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்கி இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிப்பது என இ.பி.எஸ்ஸும், அதிமுக எம்எல்ஏக்களும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையில் ஓ.பி.எஸ் அருகே இ.பி.எஸ் உட்கார சங்கடப்படுவதால் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via