ஆர்.எஸ்.எஸ்.ஸின் முழுநேர பிரச்சாரகராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.-கே.எஸ் அழகிரி

by Editor / 11-10-2022 10:51:07pm
ஆர்.எஸ்.எஸ்.ஸின் முழுநேர பிரச்சாரகராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.-கே.எஸ் அழகிரி

திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் திமுகவை தவிர அனைத்து கட்சி தலைவர்கள் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த மனித சங்கிலியில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநில தலைவர் கே. எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.நிகழ்வின் முடிவில் கேஎஸ் அழகிரி பேசியதாவது. 

ஆர் எஸ் எஸ் இல் முழு நேர பிரச்சாரகர் என்பது உண்டு.ஒரு காலத்தில் மோடி முழுநேர பிரச்சாரகராக செயல்பட்டார். தற்போது மோடிக்கு இணையான பிரச்சாரக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்.தமிழகத்தில் பாரதிய ஜனதா பேசுகிறதோ இல்லையோ ஆளுநர் தினமும் பேசுகிறார்.பாரதிய ஜனதா பெயரை சொல்லாமல் அவர்களுடைய கொள்கைகளை பேசுகிறார்.ஆளுநர் மாளிகையில் மாணவர்கள் அழைத்து ஒரு அற்புதமான கருத்தை சொல்வதாக நினைத்து சொல்லி இருக்கிறார்.என்னவென்றால் இந்தியாவை ஆங்கிலேயர்கள்தான் ஒன்று படுத்தினார்கள் என்கிற வரலாறு தவறு.ஆங்கிலேயர்களுக்கு முன்பும் இந்தியா ஒன்றாக இருந்தது என்று சொல்லி இருக்கிறார்.நானும் வரலாறை படித்து இருக்கிறேன் எவ்வளவு தான் வரலாறை புரட்டி புரட்டிப் பார்த்தாலும் அவர் சொல்வது மாதிரி எதுவும் இல்லை. 

நீங்கள் ஒரே நாடு என்று சொல்வது சாத்தியம் அல்ல பல நாடுகள்.பல நாடுகளின் தொகுப்பு தான் இந்தியா என்கிற தேசம்.அதனால்தான் அரசியலமைப்பு சட்டத்தில் ஒன்றியங்களில் கூட்டு இந்த தேசம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.கூட்டாட்சி தத்துவம் என்பது அதுதான்.நமது நாட்டில் ஒற்றை ஆட்சி சாத்தியமில்லை என்பதால் தான் கூட்டாட்சி என்கிற வார்த்தையை அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 

இந்தியாவில் வாழ்கிறவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம்.ஆனால் எந்த மொழியையும் அரசாங்கம் திணிக்க கூடாது.நீங்கள் விரும்பி படிப்பது என்பது வேறு திணிப்பது என்பது வேறு.ஆனால் இன்றைக்கு அமித்ஷா என்ன சொல்லி இருக்கிறார் என்றால் ஐஐடி எம்ஐடி போன்ற உயர்கல்வி நிலையங்கள் முழுவதும் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தால் அதனை மாற்றி இந்தியை கொண்டுவர வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார்.எனவே பிரதமர் நாற்காலி மட்டுமே இவர்களது குறிக்கோள் அல்ல அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் குறிக்கோள்.அதை முறியடிக்க வேண்டும் என்பதற்காக தான் நாம் இந்த மனித சங்கிலியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்ற அவர் பேசினார். 
 

 

Tags :

Share via