இளம்பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த குன்னம் அருகே கொல்லப்பள்ளியில் புதன்கிழமை கணவர் வீட்டில் பெண் தூக்கில் தொங்கிய நிலையில், இளம்பெண் மீட்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என தொடுபுழா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொண்டிக்குழா தம்பதிகளான டாக்டர் ஜோர்ஜ் மற்றும் ஐபி ஆகியோரின் மகளான அனுஷா என்பவரே உயிரிழந்துள்ளார். அனுஷாவுக்கும், சாபு என்பவருக்கும்
கடந்த ஆகஸ்ட் 18 அன்று திருமணம் நடந்தது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. அப்போது, வீட்டில் கணவரின் தாயும் சகோதரியும் இருந்தனர். அனுஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்தார்.சாபுவின் குடும்பத்தினர் கூறுகையில், அனுஷா மன உளைச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். சடலம் தற்போது கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Tags :