அமர்நாத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

by Editor / 04-07-2022 11:34:44am
அமர்நாத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

அமர்நாத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில்துக்சன்  என்ற கிராமத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். இவர்கள் இ தொய்யா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரிடமிருந்து துப்பாக்கிகள் கையெறி குண்டுகள் ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன பிடித்துக் கொடுத்த கிராம மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via