5 வாலிபர்கள் கைது

by Staff / 14-10-2022 05:19:51pm
5 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் திருட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் ஜீவாநகரைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஜோஸ்வா (வயது 25). இவர் கடந்த 11. 10. 2022 அன்று மீன்பிடி துறைமுகம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

அதே போன்று தூத்துக்குடி அமுதாநகர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் போஸ்கோ என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்த புகார்களின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி எம். ஜி. ஆர் நகரைச் சேர்ந்த ராஜா மகன் முகேஷ் என்ற முனியசாமி (23), கந்தசாமிபுரத்தை சேர்ந்த வேம்புராஜ் மகன் மணிராஜ் (22), அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் செல்வம் (23), முத்தையாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்த இருளாண்டி மகன் பாலகிருஷ்ணன் (22, தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (22) ஆகிய 5 பேரும் மோட்டார் சைக்கிள்களை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைது உடனடியாக தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் 5 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முகேஷ் என்ற முனியசாமி மீது 6 வழக்குகளும், மணிராஜ் மீது, 2 வழக்குகளும், செல்வம் மீது 3 வழக்குகளும், இசக்கிசெல்வம் மீது 5 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via