கறி சமைக்கும் போது கவனம்

by Staff / 17-10-2022 03:23:10pm
கறி சமைக்கும் போது கவனம்

கறி குழம்பு வைக்கும் போது கடுகு சேர்ப்பதை விட சோம்பு சேர்த்து செய்து பாருங்கள், சுவை சூப்பராக இருக்கும். மேலும் கறி மசாலா செய்யும் பொழுது முந்திரி பருப்புகளையும் அரைத்து சேருங்கள். கறி குழம்பில் தேங்காய் அரைத்து ஊற்றும் பொழுது கசகசா அதிகம் சேர்த்து அரைத்து செய்யுங்கள் ருசியாக இருக்கும்.

மீன் வறுவல் செய்யும் பொழுது அதிலிருந்து மசாலா உதிர்ந்து வந்தால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, மசாலாவுடன் கலந்து ஒரு முறை செய்து பாருங்கள்! மசாலா உதிராமல் நல்ல சுவையுடன் பொன்னிறமாக பொரிந்து வரும்.

மசாலாக்களுக்கு மிளகாய் வத்தல் வறுக்கும் பொழுது நெடி எடுக்கும். இந்த நெடி எடுக்காமல் இருக்க, இதனால் வரக்கூடிய தும்மல் பிரச்சனையை தடுக்க, மிளகாய் வற்றல் வறுக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.

 

Tags :

Share via