எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா கனிமொழி எம். பி. பதில்

by Staff / 23-10-2022 03:53:12pm
எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா கனிமொழி எம். பி. பதில்

தூத்துக்குடியில் கனிமொழி எம். பி. நேற்று நிருபர்களிடம்  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னும் சரியான முறையில் விசாரித்து மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் அவா் நடவடிக்கை எடுப்பார். துப்பாக்கி சூடு விவகாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இது நியாயமான கேள்வி தான். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
 

 

Tags :

Share via