கணவன் மனைவி வெட்டிகொலை

by Staff / 27-10-2022 01:27:40pm
கணவன் மனைவி வெட்டிகொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆண்டிகோயில்பட்டியை சேர்ந்த கணவன் கருப்பசாமி அவரது மனைவி செல்வி ஆகியோர் அவர்களது வீட்டின் முன்பு நள்ளிரவில் உறங்கிய போது அரிவாளால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளனர்.அங்குள்ள கண்மாய் மறுகால் தண்ணீரில் பானைபரி அமைத்து மீன்பிடிப்பதில் உறவினர்களுக்கிடையை நேரிட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. தகவலறிந்த கீழவளவு போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via