ஜப்பான் சமாதான துாதுவராக சென்ற மதுரை பெண் சுராஜி

by Staff / 07-11-2022 01:04:49pm
 ஜப்பான் சமாதான துாதுவராக சென்ற மதுரை பெண் சுராஜி

ஜப்பானில் ஏ. பி. சி. சி. , (ஆசியன் பசிபிக் - பிரிட்டிஷ் சில்ட்ரன் கன்வெர்ஷன்) அமைப்பு சார்பில், நாடு முழுவதும் தேர்வு செய்த 11 வயது குழந்தைகளுக்கான மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும்.

இதில் உலகளாவிய மனித நேயம், அமைதி, புரிந்துகொள்ளும் திறன் செயல்பாடு உள்ளிட்டவை விவாதிக்கப்படும். ஏ. பி. சி. சி. , யின் கீழ் அந்தந்த நாட்டில் இயங்கும் 'ஜெ. சி. ஐ. , அமைப்புகள் குழந்தைகளை தேர்வு செய்யும். இதில் இந்தாண்டு அமைதி துாதுவராக பங்கேற்க 15 நாடுகளை சேர்ந்தவர்கள் தேர்வு பெற்றனர். இதில் மதுரை சுராஜியும் ஒருவர்.

முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவுவது, ஏழைகளுக்கு மாஸ்க், இலவச உணவு வழங்குதல் செயல்பாடுகளில் ஈடுபட்டேன். தற்போது துாதுவராக தேர்வு பெற்றது மறக்க முடியாத சந்தோஷம் என்றார்.

 

Tags :

Share via