இன்று சந்திரகிணத்தையொட்டி கோவில் நடைகள் சாத்தப்படுகின்றன.

by Admin / 08-11-2022 09:04:57am
இன்று சந்திரகிணத்தையொட்டி கோவில் நடைகள் சாத்தப்படுகின்றன.


இன்று சந்திரகிரகணம் நிகழவுள்ளதால் பல பிரசித்தி பெற்ற திருக்கோவில்களின் நடைகள் சாத்தப்படுவதாகஅறிவிப்பு.திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா திருத்தலம் காலை 8.30 மணிக்கு நடைசாத்தப்பெற்று இரவு 7.30 மணிக்குசாங்கிய பூைஜகள் முடிந்த பின்பு பக்தர்களுக்கு இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.மதுரை மீனாட்சிஅம்மன் சன்னதியின் நடைகள் காலை 9.30 மணிக்கு சாத்தப்பட்டு இரவு 7.30 திறக்கப்படுகின்றன.திருப்பரங்குன்றம் முருகன் கோவில் காலை 9.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு 7.30 மணிக்கத் திறக்கப்படுகின்றன.தஞ்சை பெருவுடையார் கோவில் பகல் 12.00மணிக்கு மணிக்குச்சாத்தப்பட்டு இரவு 7.00 மணிக்கத்திறக்கப்படவுள்ளன.திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ,திருத்தணி முருகபெரூமான் திருத்தலங்கள் நடை சாத்தப்படாது என்றூம் பக்தர்கள் வழக்கம் போல் வழிபட அனுமதிக்கப்படுவர். சந்திரகிரகணம்இந்தியாமுழுதும் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.சந்திர கிரகணத்தின் பொழுது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சந்திரகிணத்தையொட்டி கோவில் நடைகள் சாத்தப்படுகின்றன.
 

Tags :

Share via

More stories