`தூய்மை பணியாளரை ஆபாசமாகப் பேசி தாக்கிய விவகாரம்; இருவர் மீது வழக்கு

by Editor / 24-06-2021 09:42:56am
`தூய்மை பணியாளரை ஆபாசமாகப் பேசி தாக்கிய விவகாரம்; இருவர் மீது வழக்கு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ளது கொடலட்டி கிராம். இந்த கிராமத்தில் கடந்த சில நாள்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் பொருட்டு ஊருக்குள் செல்லும் நடைபாதை ஓரங்களில் அதிகளவு முட்புதர்கள் இருப்பதால் அதனை அகற்றும் பணியில் அதிகரட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அங்கு வந்த ஒருவர் அவரது சொந்த நிலத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என வற்புறுத்தி பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.சற்று நேரத்தில் அந்த பகுதிக்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபர், தூய்மை பணியாளரை‌ ஆபாச வார்த்தைகளால் பேசி, செல்போனையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் தூய்மை பணியில் ஈடுபட்ட அந்த இளைஞரையும் தாக்கியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில்,தூய்மை பணியாளரிடம் அத்துமீறிய இரண்டு நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via