திருமணத்தில் விருப்பம் இல்லாததால் விபரீத முடிவு

கர்நாடகா மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்தவர் மாருதி. இவரது மகன் டாக்டர் 31 வயதான கவின். இவர் கோவை காளப்பட்டி அசோக் நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் இவருக்கு வருகின்ற ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திருமணத்தில் கவினுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவின், தான் தங்கி இருந்த அறையில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவருடன் தங்கி இருந்த மற்றொரு டாக்டர் கவினை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் கவின் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :