ட்ரோன் பறக்க விட்ட மூவர் அதிரடியாக கைது.

by Staff / 22-11-2022 02:20:05pm
 ட்ரோன் பறக்க விட்ட மூவர் அதிரடியாக கைது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் ட்ரோன் பறக்க விட்ட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.குடைவரை கோவில் என்பதால் இக்கோவிலின் பெரும் பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை சிலர் 'ட்ரோன்' கேமரா பறக்க விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 'ட்ரோன்' கேமரா பறக்க விட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் 'ட்ரோன்' கேமராவை பறக்க விட்டது தெரிந்தது

இதையடுத்து 'ட்ரோன்' கேமராவை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து புகைப்பட கலைஞர்களான மதுரை அனுப்பானடியை சேர்ந்த சுரேஷ்குமார், பிரசாந்த் பழங்காநத்தத்தை சேர்ந்த நரேந்திரகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via