விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தஞ்சாவூர் அருகே உள்ள தாளம்பட்டியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40), இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது லோகநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :