சபரிமலையில் மண்டல காலம் தினசரி நடைபெறும் பூஜைகள் குறித்த முழு விவரங்கள்...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தினமும் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும், மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலையில் மண்டல காலம் தினசரி நடைபெறும் பூஜைகள் குறித்த முழு விவரங்கள்...
அதிகாலை 2.30 மணிக்கு - பள்ளி உணர்த்தல்
3 மணிக்கு - நிர்மால்ய பூஜை
3.05 மணிக்கு - அபிஷேகம்
3.30 மணிக்கு - கணபதி ஹோமம்
3.45 முதல் 7 மணி வரையும், காலை 8 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்
7.30 மணிக்கு - உஷபூஜை
11.30. மணிக்கு - 25 கலசாபிஷேகம்
மதியம் 12.30 மணிக்கு - உச்ச பூஜை
மதியம் 1 மணிக்கு கோவில் நடை அடைப்பு
மாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்படும்
6.30 மணிக்கு - தீபாராதனை
7 மணி முதல் - புஷ்பாபிஷேகம்
9 மணிக்கு - அத்தாழ பூஜை
இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன், இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
Tags :