திங்கள்கிழமை (டிசம்பர் 2) சபரிமலையில் மழை மற்றும் மூடுபனி; ஆரஞ்சு எச்சரிக்கை

சபரிமலை: பம்பை மற்றும் சன்னிதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையுடன் மதியம் பனிமூட்டம் இருந்தது. காலையில் தொடங்கிய மழை மதியம் ஓய்ந்தாலும் பிற்பகலில் மீண்டும் வலுத்தது. காலையில் பக்தர்கள் கூட்டம் இல்லை. ஆனால் பிற்பகலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை 49,280 பேர் தரிசனம் செய்ததாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. மாலை 5 மணிக்கு பிறகும் பக்தர்கள் கூட்டம் தொடர்கிறது.
கனமழைக்கு வாய்ப்புள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை மத்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவு கனமழை என வரையறுக்கப்படுகிறது. கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பர் 2) பத்தனம்திட்டா மாவட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!
Tags : திங்கள்கிழமை (டிசம்பர் 2)