பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு இல்லை ?

by Editor / 25-06-2021 08:46:02pm
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு இல்லை ?

 

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் உயிர்த்தப்பி கரை சேர்ந்தனர் என்றும் இன்று காலை செய்திகள் வெளியாகி யிருந்தன.
இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்தது என்றும் மீன்பிடி வலைகளை வெட்டி எறிந்து பதட்டத்தை இலங்கை கடற்படை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்று இலங்கை கடற்படைப் பேச்சாளர் மறுத்துள்ளார். அதோடு, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி வரும் வெளிநாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை நிச்சயம் கைது செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via