விஷவாயு தாக்கி 2 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இன்று தொழிலாளர்களான மணிகண்டன் (35) மற்றும் ஐய்யப்பன்(36) ஆகியோர் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :