பெண் கூட்டு பலாத்காரம் - 4 பேர் கைது
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் வேலை தேடி மும்பை சென்றதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர்-தீரஜ், நந்த்லால் மற்றும் அக்ஷய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரே ஷோரூமில் பணிபுரிந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மற்றொரு குற்றவாளியான அரவிந்த் யாதவ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அரவிந்தும் அந்தப் பெண்ணும் நண்பர்களாகிவிட்டதாகவும், நவம்பர் 20 ஆம் தேதி, அரவிந்த் அந்தப் பெண்ணை மது அருந்தச் செய்து சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றுள்ளார்.
அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் அப்பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். மயக்கமடைந்த பெண்ணை அவரது குடியிருப்பு அருகே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் மாமா போலீசாருக்கு தகவல் அளித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அப்பெண் சுயநினைவு அடைந்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்தியுள்ளார். போலீசார் அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்து திங்கள்கிழமை கைது செய்தனர்.
Tags :