சிறுமிகளின் ஆபாச பட விவகாரம்: இந்தியன் வங்கியில் சி.பி.ஐ - ஆய்வு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பூமாலைபட்டியை சேர்ந்தவர் ராஜா (44) இவர் வெளிநாடுகளுக்கு சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை அனுப்பியதாக ஆதாரப் பூர்வமாக கிடைத்த தகவலின் பேரில் டெல்லியிலிருந்து 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் மணப்பாறை போலீசார் உதவியுடன் ராஜாவிடம் 13 மணி நேரம் விசாரணையைநடத்தி அவரது வீட்டில் சோதனையும் நடத்தி, லேப்டாப், செல்போன், பென் ட்ரைவ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில், அவறது வங்கிக்கணக்கில் நடைபெற்றுள்ள பண பரிமாற்றம் குறித்து மணப்பாறையிலுள்ள இந்தியன் வங்கி கிளையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இருவர் ராஜாவின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.
Tags :