பெண் போலீசிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது:

by Editor / 06-12-2022 09:37:58am
பெண் போலீசிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட  இருவர் கைது:

மதுரை ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் போலீஸ் வெள்ளி என்பவர் தனது மகனுடன் கடந்த நவ. 30-ம் தேதி பி.பி குளம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு சென்று திரும்பிய போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் ஜெகநாதன் தலைமையில்  தனி படை அமைக்கப்பட்டு வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பெண்  போலீஸிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் கோயில் பாப்பாக்குடியைச் சேர்ந்த அட்டு என்கிற சந்திரசேகர்(27) முல்லை நகர் பகுதிய சேர்ந்த சையது இப்ராகிம்(24) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையை மீட்டனர்.

 

Tags :

Share via