ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி

by Staff / 06-12-2022 12:52:57pm
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள். ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள மசார் இ ஷெரீப் பகுதியில் செவ்வாய்க்கிழமை குண்டு வெடிப்பு ஏற்பட்டது. சாலையில் ஒரு வண்டியில் குண்டு வைக்கப்பட்டது. பேருந்து ஒன்று அருகே சென்றபோது, ​​குண்டு வெடித்துச் சிதறியது.

 

Tags :

Share via