ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நெல்லையில் பேட்டி:
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று நெல்லை வந்தார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.தீபாவளி நேரங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும், சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படஉள்ளதாகவும், போக்குவரத்து துறையில் 6500 புதிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளதாகவும்,ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கொரோனா காரணமாக நடை பெறவில்லை என்றும், விரைவில் பொருளாதார நிலைமை சீர் அடைந்தவுடன் முதல்வரிடம் பேசி தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Tags :