மாண்டஸ் புயலால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் மாண்டஸ் புயலால் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயலின் தாக்கத்தால் கடலோரம் உள்ள மீனவர்களின் படகுகளும் சேதம் அடைந்தன. இந்நிலையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு தலா ரூ.20 லட்சமும், பகுதி பாதிப்படைந்த படகுகளுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். புயலால் கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு ஒரு நாளிற்கு ரூ.1000 என கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். 5 கிலோ அரிசி, ரொட்டி பாக்கெட்டுகள் கொடுத்தால் மட்டும் போதாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Tags :