துருக்கி பாராளுமன்றத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

by Staff / 01-10-2023 03:27:12pm
துருக்கி பாராளுமன்றத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்றம் அருகே உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் அருகே தற்கொலைப் படை தீவிரவாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு தீவிரவாதி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் லேசான காயம் அடைந்தனர். துருக்கி நாடாளுமன்றம் திறக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த குண்டுவெடிப்பு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via