பூஜை அறையில் மதுபாட்டில்களை பதுக்கிய பெண்

by Staff / 13-12-2022 12:44:59pm
பூஜை அறையில் மதுபாட்டில்களை பதுக்கிய பெண்


மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இவரது வீட்டின் பூஜை அறையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் சோதனை செய்ய வருவதை அறிந்த பெண், மது பாட்டில்களை சாமி புகைப்படங்கள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். அந்த ரகசிய பெட்டியில் இருந்து மதுபாட்டிகளை எடுத்து பெட்டி பெட்டியாக அடுக்கி பறிமுதல் செய்து சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via