தோரண மலையில் நாடும், நாமும் நம் பெற லோக சேமார்த்த பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இந்தக் கோவிலில் நாடும் நாமும் நலம் பெற வேண்டுமென்று பிரார்த்தனையோடு லோக சேமார்த்த பூஜை நடைபெற்றது
இந்த பூஜையில் தனிமனித பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி என்ற பிரார்த்தனையோடு கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை அணிந்துள்ள உள்ள ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் இணைந்து மாபெரும் பிரார்த்தனையோடு பஜனை வழிபாடு நடத்தப்பட்டது. திரளான ஐயப்பன் மற்றும் முருக பக்தர்கள் கலந்து கொண்டு பஜனையில் ஈடுபட்டனர். அப்போது பக்தர்கள் சிலர் பக்தி பரவத்தில் சாமி ஆடினர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்...
Tags :



















