வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. பதறிய குடும்பம்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே ஒருவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனங்கூரில் சேட்டு (45) என்பவர், வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இன்று (ஜூன் 7) அதிகாலை 3:30 மணியளவில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த டிஎஸ்பி சங்கீதா, விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :