புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக இரயில்வே அறிவிப்பு 

by Editor / 31-07-2023 10:36:23pm
புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக இரயில்வே அறிவிப்பு 

கோவில்பட்டி - நள்ளி ரயில் நிலையங்கள் இடையே தற்போதுள்ள ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1, 2 ஆகிய நாட்களில் இயக்கப்படும்  திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732) மற்றும் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) ஆகியவை விருதுநகர் - திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 இதே போல ஆகஸ்ட் 1, 2 ஆகிய நாட்களில் இயக்கப்படும் திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22628) திருவனந்தபுரத்திலிருந்து நண்பகல் 12.15 மணிக்கு 40 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும் என தென்னக இரயில்வே அறிவிப்பு.

 

Tags :

Share via