அரசு நில மதிப்பீட்டு கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் -பைரா தலைவர் கோரிக்கை.

by Editor / 25-08-2024 12:21:54am
அரசு நில மதிப்பீட்டு கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் -பைரா தலைவர் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நெல்லை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,

 நெல்லை மண்டல  ஒருங்கிணைப்பாளர் முத்துராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன். மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுந்தரபாண்டியராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாமிதுரை, இசக்கிமுத்து, பால் அண்ணா, கிங்ஸ்லி ஜெபராஜ்,உள்ளிட்ட  ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார் முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக அமைச்சருக்கு நன்றி தெரிவித்துதீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுஅகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் ஹென்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது,

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதியாக அமைந்துள்ளது. மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்கள் காகாஸ் கமிட்டியில் உள்ளதால் அப்பகுதியில் உள்ள நிலங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பொது மக்களுக்கு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. எனவே அரசு இதனை ஆராய்ந்து காக்காஸ் கமிட்டியிலிருந்து விளக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுபோல் தமிழக அரசு சமீபத்தில் நில மதிப்பீட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது குறிப்பாக பல இடங்களில் வெளி மார்க்கெட் விலை சென்ட் ஒன்றிற்கு இரண்டு லட்சம் மதிப்பீடு இருந்தால் அரசு மதிப்பீட்டில் 4 லட்சம் அல்லது ஐந்து லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது இதனால் பத்திர பதிவு செய்யும் நபர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனவே அரசு நில மதிப்பீட்டு கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் மேலும் மலைப்பகுதிகளுக்கு தனியாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

Tags : அரசு நில மதிப்பீட்டு கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் -பைரா தலைவர் கோரிக்கை.

Share via