கழிவுநீர்த்தொட்டி சுத்தம் செய்த மூன்றுபேர்விஷ வாயு தாக்கி பலி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ரங்கநாதன், நவின்குமார், திருமலை ஆகிய 3 பேர் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர்உடனடியாக அவர்களை மீட்க தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க,அவர்கள் மூவரையும் மீட்கும் பணியில்ஈடுபட்டனர்.அதில்இருவர் உடல்கள் மீட்கப்பட்டு,மூன்றாவது நபரை மீட்கும் பலமணிநேரம் எடுத்துக்கொண்டது.மீட்கப்பட்ட மூவரும் இறந்ததால்மீட்கப்பட்ட மூவர் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர்அனுப்பி வைத்தனர்,ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உணவக மேலாளர் முரளி,ஒப்பந்தகாரர் ரஜனி ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :