குழந்தைகளுக்கு உணவு வழங்கி ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி

by Staff / 23-12-2022 01:24:41pm
குழந்தைகளுக்கு உணவு வழங்கி ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பள்ளி வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு, சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார்.தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பார்வையிட்டார். அங்கு வீராங்கனைகள் விடுதியில், மாணவிகள் தங்கும் அறைகள், சமையலறை, உணவு வகைகளை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், உணவு வகைகளின் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல் மேற்கு ரதவீதியிலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இன்று ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.

 

Tags :

Share via