காருக்கு தீ வைத்த மர்ம நபர்

by Staff / 26-12-2022 01:01:58pm
காருக்கு தீ வைத்த மர்ம நபர்


சேந்தமங்கலம் அடுத்துள்ள பேலளுக்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40) இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் கோபால கிருஷ்ணனுக்கு தகவல் அளித்தனர்.பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இதில் காரின் முன் பகுதி எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பேளூக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினார். அதில் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கு கோபாலகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவர்கள் காருக்கு தீ வைத்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via