ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 10 பேர் உடல் கருகி பலி
கம்போடியாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்பெட்டில் உள்ள கிராண்ட் டைமண்ட் சிட்டி ஹோட்டல் கேசினோ மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். சுமார் 50 பேர் தீயில் சிக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். சில மணி நேரங்களாக ஹோட்டலில் பெரும் தீ பரவி வருகிறது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :