பிறகம்பெனி எண்ணெய் டின்களில் அடைக்கப்பட்ட 6 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பறிமுதல் 

by Editor / 19-01-2023 10:29:01pm
பிறகம்பெனி எண்ணெய் டின்களில் அடைக்கப்பட்ட 6 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பறிமுதல் 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள எண்ணெய் ஆலைகளில் திடீரென தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர்  அப்பொழுது ஒரு ஆலையில் உபயோகபப்டுத்தப்பட்ட எண்ணெய் டின்களில் 2535 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1155 லிட்டர் கடலை எண்ணெய், 2295 லிட்டர் பாமாயில் எண்ணெய்,என  1100   உபயோகப்படுத்தப்பட்ட காலி டின்கள் மற்றும் 70 உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் கழுகுமலையில்உள்ள  உணவகங்களிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு கலர் பொடிகள் கலக்கப்பட்ட சிக்கன் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு குளிர் பானங்களும், காலாவதியான பருப்பு வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதிமக்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via