கோர விபத்தில் 2 பேர் துடிதுடித்து பலி
சென்னை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களைபோராடி மீட்டனர்.
Tags :