கோதாவரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சேத்ர கோவில்

by Editor / 30-07-2022 02:59:56pm
கோதாவரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சேத்ர கோவில்

ஆந்திர  மாநிலத்தில் கோதாவரி நதியில் கரையோரம் இருந்த கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது .மகாராஷ்டிரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கோதாவரி நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருபுறமும் கரையை மூழ்கடித்தபடி  தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புருஷசொ த்தப்பாட்டினத்தில்  கோதாவரி கரையில் அமைக்கப்பட்டுள்ள மகா புண்ணிய சேத்திரத்தில் மண் அரிப்பின் காரணமாக சரிந்து ஆற்றுக்குள் விழுந்தது அதே  சமயம் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

Tags :

Share via