ஒன்றுபட்டு செயல்படத்தயார்-ஒ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
ஈரோடுகிழக்குத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இறந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல்ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. பல கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ள அதற்கான முயற்சியில் இறங்கி வருகின்றனர்.இந்நிலையில் அ.தி.மு.கவின் ஒருங்கினணப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் ஒர் அணியாகவும் அ.தி.மு.கஇடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒர் அணியாகவும் கடந்த ஆண்டு ஜீன் மாதத்திலிருந்து செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பும் நீதி மன்றத்தில் வழக்குகளைத்தொடுத்து வந்த நிலையில், ஒ.பன்னீர் செல்வம்இணைந்து செயல்படத்தயார் என அறிவித்ததோடு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றும் பேசிய கருத்து அ.தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.ஈரோடு தேர்தலில் பா.ஜ.க நின்றால் அ.தி.மு.க.ஆதரவு அளிக்கும் என்றும் ஒ.பி. தெரிவித்தார் .கூட்டணி கட்சியினர் ,கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தினகரன் ,சசிகலா என அனைவரையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.
Tags :