வாணியம்பாடி அருகே மஜக நிர்வாகி வெட்டிக் கொலை: 2 பேர் கைது

by Editor / 11-09-2021 11:00:46am
வாணியம்பாடி அருகே மஜக நிர்வாகி வெட்டிக் கொலை: 2 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரில் வசித்து வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளரும், நகா்மன்ற முன்னாள் உறுப்பினரான வசீம் அக்ரம், வெள்ளிக்கிழமை மாலை தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, காரில் வந்த 6 போ, வசீம் அக்ரமை சரமாரியாக வெட்டிவிட்டு, மர்ம கும்பல் காரில் தப்பித்து சென்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி நகர போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, 500-க்கும் மேற்பட்டோா் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனா். இதனால், நகரில் கடைகள் அடைக்கப்பட்டன.

மறியலில் ஈடுப்பட்டவா்களிடம் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா் சமரசம் பேசியதையடுத்து, கலைந்து சென்றனா்.

கொலை நடைபெற்றபோது அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளில் சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வசீம் அக்ரம் கொலையில் தொடர்புடைய வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், தில்லி குமார் என 2 பேரை காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜீவா நகரில் கஞ்சா விற்பனை செய்து வரும் இம்தியாஷ் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்ததால் இருந்து முன்விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து வசீம் அக்ராம் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via