பாம்பை சாப்பிட்ட 3 வயது சிறுவன்

by Staff / 05-06-2023 05:07:20pm
பாம்பை சாப்பிட்ட 3 வயது சிறுவன்

உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஆயுஷ் வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்த போது வாயில் எதையோ போட்டு மென்று கொண்டிருந்தான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி, அதனை வாயில் இருந்து வெளியே இழுத்தபோது தான் அது பாம்பு என்று தெரியவந்தது. உடனடியாக பெற்றோர் இறந்த பாம்பை பையில் போட்டு சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 24 மணிநேர சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடல்நலம் பழைய நிலைக்கு திரும்பியது.

 

Tags :

Share via