தீப திருவிழாவிற்கு சென்ற வாலிபர் பைக்கில் இருந்து விழுந்து பலி

by Staff / 07-12-2022 04:31:48pm
 தீப திருவிழாவிற்கு சென்ற வாலிபர் பைக்கில் இருந்து விழுந்து பலி

திருவண்ணாமலை தீபத்திற்கு பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறந்தார். சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தா, 22; இவர், நேற்று சென்னையிலிருந்து பைக்கில் திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு சென்று கொண்டிருந்தார். இரவு 8: 45 மணியளவில் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அருகே, குறுக்கே வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டதில், நிலை தடுமாறி பைக் கவிழ்ந்தது. இதில், கீழே விழுந்து படுகாயம் அடைந்த நந்தா சம்பவ இடத்திலேயே இறந்தார். சத்தியமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

 

Tags :

Share via