ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதில் சோலார் மின் உற்பத்தி திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், அதிக பத்திரப்பதிவு நடக்கும் மாநிலங்களில் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Tags :