மதுரையில் ஐடி ரெய்டு செய்வது போல் பேசி  மோசடியில் ஈடுபட்ட டிரைவர் கைது.

by Editor / 04-07-2024 09:46:30am
மதுரையில் ஐடி ரெய்டு செய்வது போல் பேசி  மோசடியில் ஈடுபட்ட டிரைவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவர் தேனி பாராளுமன்ற தேர்தலின்போது வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்துள்ளார்.

இதையடுத்து விக்னேஷ் மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு ஐடி ரெய்டு வரவுள்ளதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் ஐடி ரெய்டு வராது தான் வருமானவரித்துறை ஊழியர் என கூறி மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் மதுரையில் உள்ள நகைக்கடைகளுக்கும் தேனியில் உள்ள மருத்துவமனை கம்பத்தில் உள்ள உணவகம் ஆகிய பகுதிகளுக்கு போன் செய்து ஐடி ரெய்டு நடைபெற உள்ளதாக கூறி செல்போன் மூலமாக பணம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் புஷ்பராஜ் என்பவர் அளித்த புகாரின் கீழ் விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்குமாரை கைது செய்து விசாரணை.

மதுரை , தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறி தொழிலதிபர்களை போன் மூலமாக மிரட்டிய வழக்கில் ஆக்டிவ் டிரைவர்  கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : மதுரையில் ஐடி ரெய்டு செய்வது போல் பேசி  மோசடியில் ஈடுபட்ட டிரைவர் கைது.

Share via