சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் முதல் வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல்

by Staff / 31-01-2023 04:16:48pm
 சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் முதல் வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல்

ஈரோட்டில் முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் முதல் வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தர் . தேர்தல் மன்னனான பத்மராஜன் இதுவரை 232முறை பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். இந்நிலையில் தற்போது 233 ஆவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதே போல் காந்தியவாதி ரமேஷ் காந்தி வேடம் அணிந்து தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாயை பத்து ரூபாய் காசுகளாக மாற்றி காந்தியவாதி ரமேஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பத்து ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களிலும் பயன் படுத்தலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து நோக்கில் தான் தான் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் காயின்களாக கட்டுவதாக காந்தியவாதி ரமேஷ் தெரிவித்தர் 

 

Tags :

Share via