4 நாட்கள்  மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

by Editor / 03-02-2023 07:38:48am
4 நாட்கள்  மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது இதை அடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இதை தொடர்ந்து மீன்வளத்துறை விடுத்த எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

தூத்துக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் நான்காவது நாளாக இன்று மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் மேலும் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில்பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via