முகநூல் காதல் 7-பிரிவுகளின் கீழ் வழக்கு கிருஷ்ணகிரி வாலிபர் கைது.

by Editor / 09-02-2023 09:49:42am
முகநூல் காதல்  7-பிரிவுகளின் கீழ் வழக்கு  கிருஷ்ணகிரி வாலிபர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் ஷாலியா(22) இவருக்கும்  கிருஷ்ணகிரி ரெட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்த நிஷோர் சிவசங்கர் (25)என்ற வாலிபருக்கும் முகநூலில் பழக்கம் உருவாகி நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.இதன் தொடர்ச்சியாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சம்பவத்தன்று காதலியை சந்திக்க நிஷோர் சிவசங்கர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.அப்போது நிஷோர் சிவசங்கருக்கும் முகநூல் காதலி ஷாலியா குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அது மோதலாக மாறியுள்ளது இதன் தொடர்ச்சியாக காதலி ஷாலியா தன்னையும் தன் பெற்றோரையும் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து தாக்கியதாக நிஷோர் சிவசங்கர் மீது புகாரளித்த நிலையில் இரணியல் போலீசார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 7-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நிஷோர் சிவசங்கரை போலீசார்  கைது செய்தனர்.

 

Tags :

Share via